Sunday, December 18, 2016

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 1  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 1

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் - சி. கு. நாராயணசாமி முதலியார்
2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. வடநாடு சென்ற தமிழரசர் காலம் - மா. இராசமாணிக்கம்
5. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
6. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம் -  இதழாசிரியர்

வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும்
சி. கு. நாராயணசாமி முதலியார்
[பாண்டிய மன்னர்களின் "கொற்கையம் பெருந்துறை"  என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க  துறைமுகமாகவும் மற்றொரு  தலைநகராகவும்  விளங்கிய  "கொற்கை மாநகர்" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய  மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள்  குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார்.  இது ஒரு தொடர் கட்டுரை].

2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... இது ஒரு தொடர் கட்டுரை].

3. தில்லையுலா (தொடர்ச்சி ...)
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. வடநாடு சென்ற தமிழரசர் காலம்
மா. இராசமாணிக்கம்
[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள்  ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன.  இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர்.  வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை].

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[- 13 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப்பொழில் அதன் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி கூறுகிறது
- 1937 ஆண்டின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது, வரவிருக்கும் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் குறித்த திட்டங்கள் விவாதத்தில் உள்ளது
- 1937 ஏப்ரல் 6, 7, 8 இல் தஞ்சையில் நடந்த அறிஞர்கள் மாநாட்டில், "காங்கிரஸ் கட்சி அரசியல் தலைவரின்" தலைமையில், இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கி கற்பிக்க எடுத்த முடிவை கரந்தைத் தமிழ்ச் சங்கம் எதிர்க்கிறது.    இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை 10% என்பதையும் குறிப்பிட்டு, இம்முடிவு தமிழகத்தின்  கல்வி வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி, அரசியல் தலைவரின் பேதைமையையும், தமிழரின் அடிமை மனப்பான்மையையும் கண்டிக்கிறது].

6.   நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[- ஈழகேசரி வாரஇதழ் தமது தமிழ் வளர்சிப்பணியின் மற்றொரு முயற்சியாக வெளியிட்டுள்ள "ஆண்டு மடல்" இதழின் சிறப்பு பாராட்டப்படுகிறது
- சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவாக, ஈழகேசரியின் ஆசிரியர் நா. பொன்னையா அவர்கள்  வெளியிட்டுள்ள "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்" பதிப்பு பாராட்டப்பட்டுள்ளது].

7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்க அமைப்பின் கல்லூரி, மருத்துவசாலை, வெள்ளிவிழா திட்டங்களுக்கு நன்கொடை அளித்தோர்  பெயர், நன்கொடைத் தொகை குறிப்பிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது].
________________________________________________

No comments:

Post a Comment